Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Thursday, June 17, 2010

டவுட் தனபாலு

காங்கிரஸ் கட்சி மனித உரிமைத்துறை செயலர் மிட்டல்: போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் போது, வாரன் ஆன்டர்சன் தப்பிக்க அனுமதி கொடுக்காமல் இருந்தால், கோபத்தில் இருந்த மக்கள் அவரை அடித்தே கொன்றிருப்பர்; அதனால், அவர் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார். அதன்பின், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, ஆன்டர்சன் மீது, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டு, இழப்பீடு பெறப்பட்டது.

டவுட் தனபாலு: மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய, கசாப் மீதும் பொதுமக்கள் கோபத்தில் இருக்காங்க... அதனால, அவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டு, அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தண்டனையோ, இழப்பீடோ பெற்றுத் தந்திடுங்களேன்...!

Tuesday, June 01, 2010

டவுட் தனபாலு

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி: தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெறும் என்ற முடிவை தீர்மானமாக நிறைவேற்றி இருந்தனர். இந்த தீர்மானம் குறித்து, நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முதல்வரைச் சந்தித்து பல விஷயங்களை பேசினோம்.
டவுட் தனபாலு: கூட்டணி வேணும்னு உங்க நிறுவனர் எழுதிய இரண்டு கடிதங்களையும், தேதி வாரியாக, தி.மு.க., உயர்மட்டக்குழு தீர்மானத்தில சொல்லிட்டாங்களே... அதுக்கப்பறமும், "மீசையில் மண் ஒட்டாத' கதையா, கூட்டணிக்காக ஏதோ, அவங்க தீர்மானம் போட்டதால் தான், நீங்க ஒத்துக்கிட்ட மாதிரி, "பில்டப்' பண்றீங்களே!