Thursday, June 17, 2010

டவுட் தனபாலு

காங்கிரஸ் கட்சி மனித உரிமைத்துறை செயலர் மிட்டல்: போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் போது, வாரன் ஆன்டர்சன் தப்பிக்க அனுமதி கொடுக்காமல் இருந்தால், கோபத்தில் இருந்த மக்கள் அவரை அடித்தே கொன்றிருப்பர்; அதனால், அவர் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார். அதன்பின், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, ஆன்டர்சன் மீது, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டு, இழப்பீடு பெறப்பட்டது.

டவுட் தனபாலு: மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய, கசாப் மீதும் பொதுமக்கள் கோபத்தில் இருக்காங்க... அதனால, அவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டு, அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தண்டனையோ, இழப்பீடோ பெற்றுத் தந்திடுங்களேன்...!

No comments:

Post a Comment