Saturday, July 31, 2010

பாலியல் உறுப்புகளுக்கு யப்பானில் திருவிழா! (அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்)

யப்பானிய மக்கள் ஒவ்வோராண்டும் வசந்த காலத்தை காமத் திருவிழாக்கள் மூலமாக வரவேற்பார்கள். இந்தக் காமத் திருவிழாக்கள் வழமையாக மார்ச் மாத நடுப் பகுதியில் மிக விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும்.


இந்தக் காமத் திருவிழாக்கள் இரு வகையானவை. ஒன்று ஆண் உறுப்புத் திருவிழா. மற்றையது பெண் உறுப்புத் திருவிழா. இந்த உறுப்புக்களுக்கு கோவில்கள் உண்டு.

திருவிழாக் காலங்களில் கடவுள்களுக்குரிய அந்தஸ்தும் , மரியாதையும், கௌரவமும் வழங்கப்பட்டு இந்த உறுப்புக்கள் வழிபடப்படும். இந்த உறுப்புக்களின் திருப்பவனியும் இடம்பெறும். பால், வயது, சமய வேறுபாடுகள் இன்றி யப்பானியர்கள் அனைவருமே இந்த விழாக்களில் தவறாது கலந்து கொள்வார்கள்.

திருவிழாக்கள் இடம்பெறும் இடங்களில் ஆண் உறுப்புக்கள், பெண் உறுப்புக்கள் ஆகியவற்றின் வடிவிலான ஏராளமான பொருட்களை அங்கு காண முடியும். இந்த உறுப்புக்களின் வடிவிலான பொருட்கள்,இனிப்புக்கள் போன்றன அமோகமாக விற்பனை ஆகும். இந்தத் திருவிழாக்கள் 1500 வருடங்கள் வரை பழைமையானவை.


யப்பான் முந்தைய நாட்களில் விவசாய நாடாக இருந்துள்ளது. எனவே செழிப்பான அறுவடையைக் கோரியும்,பிள்ளை வரம் கோரியும் இந்த உறுப்புக்களை அவர்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். அண்மைய நாட்களில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விழாக்களாகவும் இவை உள்ளமை வெளிப்படை. அத்துடன் இந்த விழாக்கள் இடம்பெறும் நகரங்களுக்கு அமோக வருமானமும் கிடைக்கப் பெறுகின்றது.

யப்பானின் ஆண் உறுப்புத் திருவிழா Komaki City's Tagata shrine ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ஆம் திகதி இவ்விழா இடம்பெறுகின்றது.அதேபோல இந்த ஆலயத்துக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் ஆணுறுப்புத் திருவிழாவை அண்மித்த நாட்களில் பெண் உறுப்புத் திருவிழா இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

அனைவரும் புத்தாடை அணிந்து கொள்வார்கள்.ஆரோக்கியமான குழந்தைகளை வேண்டி வழிபாடு இயற்றுவார்கள்.மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். சிறுவர்கள் அதிகாலையில் பெண் உறுப்பின் வடிவத்திலான சொருபங்களை பெண் உறுப்பு ஆலயத்துக்கு கொண்டு செல்வார்கள்.

அதன் பின் சுமார் 40 பேர் கொண்ட வாலிபர் குழு ஒன்று பிரமாண்டமான பெண் உறுப்பு சொருபத்தை ரதம் அல்லது பல்லக்கு மாதிரியான ஒன்றில் வைத்து தூக்கிக் கொண்டு செல்வார்கள்.இவர்களுக்குப் பின்னால் பெண் உறுப்புக்களில் சிறிய சொருபங்கள் இரண்டு தனித் தனியாக சுமந்து வரப்படும்.



நன்றி: தமிழ் CNN

Tuesday, July 27, 2010

கூட்டணிக்கு கட்டுப்பாடு வருமா?

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் மும்முரம் காட்ட இருக்கின்றன. பொதுவாக, தற்போது கட்சிகள்  அமைக்கும் கூட்டணிகள், கொள்கைகளின் அடிப்படையில் அல்லாமல்,பல்வேறு சுயநல அடிப்படையில் மட்டுமே உருவாவதும், தேர்தலுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகள்  காரணமாக கூட்டணிக் கட்சிகள் எதிரெதிராக மாறுவதும் சகஜமாகிவிட்டன.இதன் காரணமாக,வாக்காளர்களின் உண்மையான விருப்பங்கள் தேர்தல் முடிவுகளில்  வெளிப்பட முடியாத நிலை காணப்படுகிறது. இத்தகைய முறையற்ற கூட்டணிகள் அமைவதை நமது சட்டங்களால் தடுக்க முடியாததால், தேர்தல்கள் மூலம் ஒருவித போலி  ஜனநாயகமே நமக்குக் கிடைக்கிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, அத்தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிட விரும்பும் கட்சிகள், தமது கூட்டணியின் பெயர், கொள்கைகள், தலைமை, பங்குபெறும் கட்சிகள் போன்ற தகவல்களை குறித்த காலத்திற்குள் தேர்தல் கமிஷனிடம் முறையாக தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும். அதற்குப் பிறகு, கூட்டணிக்குள் எவ்வித  மாற்றத்தையும் அனுமதிக்கக்கூடாது.தேர்தல் கமிஷனிடம் கூட்டணி குறித்த தகவல்களைத் தெரிவிக்காத கட்சிகள்,பிறகு கூட்டணி அமைத்து போட்டியிட அனுமதிக்கக்  கூடாது.

கூட்டணி அமைத்த பிறகு கூட்டணிக்கென்று பொதுவான தேர்தல் அறிக்கையை மட்டுமே வெளியிட அனுமதிக்கப்பட வேண்டும்.

அதேபோன்று,கூட்டணிக் கட்சிகள் அனைத்தும்,கூட்டணிக்கென ஒதுக்கப்படும் பொதுவான சின்னத்தில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு  கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் வேட்பாளர்கள், அக்கூட்டணியின் வேட்பாளர்களாக மட்டுமே கருதப்பட வேண்டுமேயொழிய,தமது கட்சியின் வேட்பாளர்களாகக்  கருதப்படக்கூடாது.

தேர்தலின் மூலம்,ஒரு கூட்டணியின் சார்பாக,மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம்)தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்,அச்சபையில் கூட் டணியின் உறுப்பினர்களாக மட்டுமே கருதப்பட வேண்டும்.

ஒரு கூட்டணியிலிருந்து, எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.க்கள் வெளியேற விரும்பினால்,கட்சித்தாவல் என கருதப்பட்டு அவர்களின் பதவி பறிக்கப்படும் விதத்தில்  நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்.

இத்தகைய விதிமுறைகளை அறிவிக்காத நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது என்பது மக்களாட்சிக்கு எதிரான அவலங்களை தெரிந்தே அனுமதிப்பதற்கு ஒப்பான செயல்!

- ப. அருண்மணி,சேலம்-9.

நன்றி: குமுதம்

Tuesday, July 20, 2010

நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பூண்டு

நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு இருக்கிறது. பூண்டில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வேதிப்பொருளை மாத்திரை வடிவில் உட்கொண்டபோது முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் குணமடைகிறார்கள். எலிகளிடம் நடத்திப் பார்த்த சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக ஜப்பானின் சுஷுகா மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஹிரோமு சாக்குராய் கூறுகிறார்.

பூண்டில் காணப்படும் வெனேடியம் மற்றும் அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறதாம்.

இதற்கு முன்பாக வெனேடியம்-அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊசிமருந்து 1ம் வகை 2ம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு குணமளித்தது. இந்த புதிய ஆராய்ச்சியின் விளைவாக வாய்வழி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் கணையநீரில் உள்ள பீட்ட செல்கள் கணைய நீரை சுரக்காமல் இருந்தால் அது முதல்வகை நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இந்த நோயாளிகள் இன்சுலினை தினந்தோறும் ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும்.

தசைகள், கொழுப்பு, கல்லீரல் இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கணையத்தில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்படுகிறது. நாளடைவில் தேவை பெருக்கிக்கொண்டே போகும்போது தேவைக்கேற்ப இன்சுலினை சுரக்கும் சக்தியை கணையம் இழந்துவிடுகிறது. இந்தவகை நோயாளிகள் மருந்துடன், உடல் எடையைக் குறைக்கவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டாம் வகை நீரிழிவுநோய் எனப்படும்.

இவர்கள் சாப்பிடும் மருந்துகளால் பக்கவிளைவை எதிர்கொள்ளுகிறார்கள். இந்த மருந்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.



நன்றி: கீற்று

என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.


ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.

திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.

மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.

வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி

பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.

நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.


நன்றி: கீற்று

Monday, July 19, 2010

Friday, July 16, 2010

“சீமான்”களை தூக்கிலிடு!

காட்டிக் கொடுக்கூட்டிக் கொடு
கொலை செய் கொள்ளையடி
அதிகாரத்தைக் கைப்பற்று – இதுதான்
அரசியல் அறிச்சுவடி

மக்களை மந்தை களாக்கு
மாண்பு மிகுக்களை மாமாக்களாக்கு
பட்டியில் அடை – மக்களாட்சி
இதுவென்று முரசுகொட்டு

பட்டியிலடைத்த மந்தைகள் கேட்கா
தனைத்தையும் இலவசமாகக் கொடு
தவணையில் கொடு – பிச்சையென்றுரைத்தால்
கொடையென்று சொல்

அன்பு அகிம்சையென்று பசப்பு
பண்பைப் பேணென்றுரைத்து மக்களை
அடித்து அடக்கு – அதுதான்
சட்ட ஒழுங்கென்றுரை

உழைக்கும் மக்களை ஊதாரிகளாக்கு
மதுவாறு ஓடவிட்டு காமக்கிழத்திகளை
வீடுதோரும் ஆடவிடு – பொற்கால
ஆட்சியென்பது இதுவே

நிலமும் நீரும் காற்றும்
ஆகாயமும் பொதுவென்றுரை முன்னேற்றம்
வேண்டுமென கூவு – தரகுக்கூலிக்காக
மாற்றானுக்கு அனைத்தையும் விற்றுவிடு

அந்தப்புரத்தை அதிகார மையமாக்கு
காமத்தின் கழிவில் முளைத்த
காளான் களனைத்தையும் – பட்டத்துக்
குரியவர்களென்று பறைசாற்று

உன் சிம்மாசனத்திற்கு ஆசைப்படும்
வாரிசுகளுக்கு போட்டி வை
மோதவிடு! மோதிவிடு! – பலிகடாவாக்கு
தொண்டனை மட்டும்

போதாதென்றால் காளான்களனைத்தையும் களமிறக்கு
அவர்களுக்குள் மோதட்டும்! மோதட்டும்!
மோதிக்கொண்டே இருக்கட்டும்! – மன்னன் நீதான்
கட்டையில் போகும்வரை

குடும்பத்தை எட்டுத்திக்கும்அனுப்பு கிடைத்ததைச்சுருட்டு
பொதுவுடமை பேசுவோரை பொல்லாப்பாக்கு – பொதுவுடமையின்
குறியீடென் குடும்பமென்றுரை
எதிரியோடு மண்டை நாட்டோடும்
அன்புப் பாராட்டு கேட்டதனைத்தும்
கொடுத்துதவு மகிழ்வோடு – “இறையாண்மை“
இருவருக்கும் இன்றியமையாதது

உன்குடி மக்களை கொன்றொழித்தாலும்
எதிரியோடு கொஞ்சிக் குலாவு
விருந்துண் குதூகலி – அவன்வீசும்
எலும்புத்துண்டை கவ்வு

மெதுவாகக்கடி! நீகடிக்கு மெலும்பு
மானமுள்ள மறவனின் குறுத்
தெலும்பாக இருந்தாலும் – அதுவுமுன்னை
கொல்லும் எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை! செய்கின்றேன்
இனமானம் மொழிமானம் தன்மானமென்று
மக்களை பேசவிடாதே – அத்தனையும்
நீயே பேசு

நல்வித்துக்கள் நாட்டில் அங்கொன்றும்
இங்கொன்றும் வளரத்தான் செய்யும்
அவைகளைகண்டு அஞ்சாதே – அணைத்துப்பார்
இல்லையெனில் அழித்துவிடு

இனமானம் பேசும்நெடு மாறன்களை
நாடுகடத்து சீறும்சீமான்களை தூக்கிலிடு
முழங்கும்நா வைகோடாரிக் – காம்பால்
அடித்து விரட்டு

மறவன் நீயேகதியென சரணடைந்தால்
விட்டுவைக்காதை அப்போதே கடித்துக்குதறு
குருதிக்கவிச்சை குமட்டினால் – இரண்டுநாழிகை
எதுவுமுண்ணாமல் கடற்கரையில்கிட

பாலகரின் குருதியுனக்கு போதையேற்றும்
அந்தப்புரத்தில் புலவர்கூட்டத்தை பாடவிடு
நடனமாதரை யுன்போதை – தெளியும்வரை
ஆடையவிழ்த்து ஆடவிடு

மானங் கெட்டவர்களே நாட்டில்
நடமாடமுடியு மென்பதை உலகுக்குணர்த்து
கொண்டாடு! கொண்டாடு! - நான் மட்டுமே
தலைவனென்று கொண்டாடு!


குற்றத்தில் முதிர்ந்தகரு

நன்றி: தமிழ்வெளி. காம்

Symbol of Rupee - Created by Udhaya Kumar

தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு!


ஜூலை 15, 2010 :௦ தமிழக இளைஞர் உதய குமார் கைவணத்தில் உருவாகியிருக்கிறது, இந்திய ரூபாய்க் குறியீடு! இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை, மத்திய அமைச்சரவை இன்று இறுதி செய்து ஒப்புதல் அளித்தது.



நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய ரூபாய்க்கு குறியீடு வடிவமைக்க போட்டி அறிவிக்கப்பட்டது. குறியீட்டை வரைந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இருந்து அரசுக்கு விண்ணப்பங்கள் வந்தன.



அதில் இருந்து தேர்ந்தெடுத்து, இறுதி செய்யப்பட்டுள்ள இந்திய ரூபாய்க் குறியீட்டை வடிவமைத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த டி.உதய குமார் (வயது 32). அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, அவருக்கு ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.



( இந்திய ரூபாய்க் குறியீடு குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள... இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல் )



சென்னையில் பிறந்து வளர்ந்த உதய குமார், அண்ணாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆர்க்கிடெக் படித்தவர். பின்னர், மும்பை ஐ.ஐ.டி.யில் டிஸைனிங்கில் பி.எச்டி பயில்பவர். தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.



"நான் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.



நீண்ட நாட்கள் சிந்தித்து, இந்த குறியீட்டை உருவாக்கினேன். தேவனகிரி எழுத்துருவில் இருந்து 'ரா' (Ra)-வை எடுத்து, அதில் நமது தேசியக் கொடியைக் கலந்தேன். குறியீட்டின் மேல்பகுதியில் இந்தியத் தன்மை மிகுந்திருக்கும். பிறகு, ரோமன் எழுத்தான ஆர் (R)-ஐயும் இணைத்தேன், அதன்மூலம் சர்வதேசத் தன்மை கிடைக்கும் என்பதற்காக," என்று கூறியிருக்கிறார் உதய குமார்.



இந்திய ரூபாய்க்கு குறியீடு தந்துள்ள உதய் குமாருக்கு தனது விருப்பப்படியே ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. அவருக்கு, கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 
 
 
இதை படிக்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது.


நன்றி: விகடன்

Thursday, July 15, 2010

கவிஞர் தாமரை

எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை ‐ கவிஞர் தாமரை
15 July 10 12:33 am (BST)
 
 
நீங்கள் இந்த பூமியில் பிறந்திருப்பதால், உங்கள் அடையாளமாக எதையேனும் விட்டுச்செல்லுங்கள் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். அந்த முனைப்புதான் இவரைப் பல தளங்களில் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையையும் அதை வழிநடத்தும் பார்வையையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் தாமரை.
 
பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கோவை‐தான். எளிமையான குடும்பம், தாத்தாவுக்கு நெசவுத் தொழில். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள் என்பதால் படிப்பதற்கான வாய்ப்பு சிறு வயதிலேயே அமைந்தது. தனது பள்ளி நூலகத்தில் இருந்து வாரம் இரண்டு புத்தகங்கள் எடுத்துவருவார் அப்பா. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட்டு மீண்டும் புத்தகம் கேட்டு நிற்கிற என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டார் அவர். சித்திரக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்னு ஆரம்பிச்சு எல்லா புத்தகங்களையும் படித்தேன். இது சரி, இது தப்புன்னு யாரும் எங்களுக்கு சொல்லித்தரலை. நல்ல கல்வி, சிறந்த ஒழுக்கம் ரெண்டும்தான் எங்களுக்கு போதிக்கப்பட்டன. இவைதான் வாழ்க்கையோட ஆதாரம்னு வளர்ந்த பிறகு புரிஞ்சுது. நான் படித்த கல்விதான் என் இன்றைய திரைப்படத்துறை வெற்றிக்கு அடித்தளம்.
 

வானொலியில பாடல்கள் கேட்கறதும் திரைப்படத்துக்குப் போறதும்தான் எங்களோட பொழுதுபோக்கு. இள மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துற ஆற்றல் திரைப்படத்துக்கு இருக்கு.
 
படிக்கும் பழக்கம் என்னை ஐந்தாம் வகுப்பிலேயே கதை எழுத வைத்தது. அது நீதி போதனை வகுப்பு. ஏதாவது ஒரு நீதிக்கதையை எழுதச் சொன்னாங்க விஜயலஷ்மி ஆசிரியை. "தயிர்க்காரி கண்ணம்மா" என்ற கதையை எழுதினேன். எல்லாரோட ஏட்டையும் திருப்பித் தந்தவங்க, என் பேரை மட்டும் கூப்பிடவே இல்லை. கடைசியா என்னைக் கூப்பிட்டாங்க. "இவ மட்டும்தான் சொந்தமா கதை எழுதியிருக்கா. ஒரு பிழைகூட இல்லை"ன்னு என்னைப் பாராட்டி கைத்தட்டச் சொன்னாங்க. என் எழுத்துக்குக் கிடைச்ச முதல் அங்கீகாரம் அது. அந்தக் கைத்தட்டல்தான் இன்னைக்கு நிறைய விருதுகளுக்குக் காரணமா இருந்திருக்கு.
 
பொறியியல் முடிச்சதும் பெரிய நிறுவனத்துல வேலை கிடைச்சுது. என்னைச் சுற்றியிருந்த ஆண்கள் மத்தியில் நான் மட்டும்தான் ஒரே பெண் பொறியாளர். எனக்குக் கீழே வேலைபார்த்த பெரும்பாலானவர்கள், ஒரு பெண்ணுக்குக் கீழே வேலை பார்ப்பதை சங்கடமாகக் கருதினார்கள். அலுவல் வாழ்க்கையில் பல இடையூறுகளை அது எனக்கு ஏற்படுத்தியது.
 

பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்று அவளது நடத்தையைக் குறிவைக்கும் குற்றச்சாட்டு. ஏற்றுக்கொள்ள முடியாத உயரங்களுக்கு அவள் வளர்ந்தால், இந்த ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி அவளைப் பாதாளத்துக்குள் புதைத்துவிடலாம் என்பது பலரின் நினைப்பு. இதில் இருந்து தப்பிப்பதற்காகவே எந்தச் செயலையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துச் செய்வேன். அந்தப் பக்குவத்தைத் தந்ததும் பொறியாளர் பணிதான்.
 

நான் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்ததால் தவறுகள் மட்டும்தான் என் கண்களுக்குப் படும். எந்தெந்த இடத்தில் எல்லாம் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அனுமானிக்கும் திறமையை என் பணி எனக்குக் கற்றுத்தந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த அனுபவம்தான் பின்னாளில் என் உயர்வுக்குத் துணை நின்றது. செய்வன திருந்தச் செய் என்ற என் இயல்பான குணம் அங்கே பட்டைதீட்டப்பட்டது. நேர்மையாக, உறுதியாக இருந்தால் எதற்கும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பது நான் கற்றுக்கொண்ட பாடங்களுள் ஒன்று.
 

இதற்கிடையில், நடந்த திருமணம் வெறும் கசப்பைத்தான் தந்தது. என் உணர்வுகளை மதிக்காமல் உழைப்பைச் சுரண்டியவர்களுடன் தொடர்ந்து வாழ்வதில் எனக்குச் சம்மதமில்லை. பிரச்சினைகள் பூதாகரமாகி என்னை சோர்வுறச் செய்தபோது ஒரு முடிவெடுத்து வேலையை உதறினேன். அடுத்தது மணமுறிவுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. பிறந்த வீட்டுக்குத் திரும்பிச்செல்ல விரும்பாமல் எழுத்துத் துறையில் இருக்கும் முடிவோடு சென்னைக்கு வந்தேன்.
 

நிறைய திரைப்பிரபலங்களைச் சந்தித்தேன். எனினும் வாய்ப்பு கிடைப்பது எளிதாக இல்லை. திரைப்படத்துறையில் வாய்ப்புக் கிடைக்க ஏதேனும் அடையாளம் அவசியம் என்பது புரிந்தது. மீண்டும் கோவைக்கே திரும்பினேன். பத்திரிகைகளுக்குக் கதை, கவிதைகள் எழுதிக் குவித்தேன். இலக்கிய வட்டத்தில் பெயர் அடிபடுமளவுக்கு வளர்ந்தேன். இந்த அடையாளத்துடன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினேன்.
 

வெறும் தாமரையாக வந்தபோது தயங்கியவர்கள், கவிஞர் தாமரை என்றபோது வாய்ப்புத் தரலாமே என யோசித்தார்கள். தொடர்ச்சியான தேடுதலுக்குப் பிறகு 97இல் இயக்குனர் சீமான் படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக நிறைய அலைய வேண்டியிருந்தது. 2000இல் இயக்குனர் கௌதம் படத்தில் "வசீகரா" பாடல் எனக்கான முகவரியாக அமைந்தது. வாழ்வில் நான் சந்தித்த துன்பம், கேள்வி, தேடல், விரக்தி இவற்றையெல்லாம் என் பாடல்களில் வார்த்தைகளாக வடித்தேன். என் சமூகப் பார்வைக்கு ஏற்ற பாடல்களைவிட காதலும் காதல் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இருந்தாலும் தொடர்ந்து எழுதினேன்.
 
கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழில் மட்டுமே எழுதுவேன், இரட்டை அர்த்தப் பாடல்கள், ஆபாச பாடல்களுக்கெல்லாம் என் பேனா வளையாது என்பதில் இந்த நிமிடம் வரை உறுதியாக இருக்கிறேன். இதனால் பொருளாதார ரீதியாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்றாலும், என் நோக்கத்தில் நான் வென்றிருக்கிறேன். பாடலுக்கேற்ற சூழ்நிலை எதுவாக இருந்தாலும் கண்ணியமான வார்த்தைகளால் அதைக் கையாளலாம். "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது" ரூ இதைவிடச் சிறந்த முதலிரவுப் பாடல் இருக்க முடியுமா?
 
மணமுறிவுக்குப் பிறகு நான் தியாகுவை மணந்துகொண்டேன். அவர் ஒரு சமூகப் போராளி. தன் கொள்கைக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாத அவரது உறுதிதான் எங்கள் திருமணத்துக்கு அடித்தளம். அவரது "சுவருக்குள் சித்திரங்கள்" பத்திரிகைத் தொடர் மூலம்தான் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன். திரைப்படத்தில் கதாநாயகன் கொடியவனை அழித்தொழித்தால் கைதட்டிப் பாராட்டுவார்கள். நிஜ வாழ்வில் தூக்கு தண்டனை தருவார்கள் என்பதற்கு சாட்சியாக சிறையில் இருந்தார் அவர்.
 
அந்த அனுபவங்கள் பற்றிய தொடர்தான் அது. அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைந்து அவர் சிறையில் இருந்து விடுதலை அடைந்திருந்தார். அது தெரியாமல் தொடர்ந்து அவர் சிறையில் இருப்பதாகவே நினைத்து அவருக்குக் கடிதங்கள் எழுதினேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, "நான் தற்போது சிறையில் இல்லை" என்று அவரிடம் இருந்து ஒற்றை வரியில் பதில் வந்தது. விடாப்பிடியாக இருந்து அவரைச் சந்தித்தேன்.
 

அவரிடம் பேசப்பேசதான் முதலாளிகளுக்காகத் தன் உடம்புத் தோலையே செருப்பாகத் தைத்துப் போடும் வர்க்கம், பரம்பரை பரம்பரையாக கொத்தடிமைகளாக வேலை செய்யும் கொடுமை என சமூகத்தின் இன்னொரு பக்கம் என் கண்முன் விரிந்தது. தமிழ்த் தேசிய இயக்கம் மற்றும் சிறைப்பட்டோர் நலனுக்கான இவரது இயக்கச் செயல்பாடுகள் என்னை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றன.
 
எதற்காகவும் இன்னொரு உயிரை வதைக்கக் கூடாது என்பதனால் நான் அசைவமே சாப்பிட்டதில்லை. ஆனால் மனித உயிர்களைப் புழுவைவிடக் கேவலமாக நினைக்கிறது சமூகத்தின் ஆதிக்கப் போக்கு. அதற்கு எதிராகப் போராடும் என் கணவரது பணிகளில் உடனிருக்கிறேன். அவரது தாய்த் தமிழ்ப் பள்ளியின் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்கிறேன். அகதிகள் முகாமில் இருக்கும் குழந்தைகளின் கல்விக்காக உதவுகிறோம். எந்த வேலையையும் நாங்கள் வெளியே சொல்வதில்லை. சொன்னால் விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடுகிறார்கள் என்ற பெயர்தான் மிஞ்சும். சமீபத்தில் கொழும்பில் நடந்த திரைப்பட விழாவிற்கு இங்கிருக்கும் கலைஞர்கள் போகாமல் தடுத்தது எங்கள் பணிக்குக் கிடைத்த வெற்றி!
 

இடையில் வீட்டுப் பொறுப்பையும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். என் மகன் சமரன் மூன்றாம் வகுப்புப் படிக்கிறான். முடிந்தவரையில் அவனுக்கானதை கவனித்துக் கொள்கிறேன். என் கணவர் தன் சமூகப் பணிகளை குறைத்துக்கொண்டு வீட்டைப் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் நான் என் பாடல் பணிகளில் சமரசம் செய்துகொள்கிறேன்.
 

பெண்ணியம் பேசுவதில் தவறில்லை. அதற்காக ஆண்களைத் துச்சமாக மதித்து பெண்களே உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆண்களை நாம் மதித்தால்தான் நம்மை அவர்கள் மதிப்பார்கள். ஆண்களோடு சரியான முறையில் பழகி அவர்களை வென்றெடுக்க வேண்டும். அதுதான் உண்மையான பெண்ணியத்தின் வெற்றி!
 

வண்டுகளின் குடைச்சலையும் வெயிலின் உக்கிரத்தையும் தாங்கி நிற்கிற மூங்கில்தான் புல்லாங்குழலாகிறது. என்னைத் துரத்தி வந்த துன்பங்களுக்கு எதிராக நான் "எதிர்த்துப் போராடுதல்" என்னும் வாளைச் சுழற்றி நின்றேன். அது வெற்றிக்கான வாசல்களைத் திறந்துவிட்டது. அதில் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருக்கிறேன்,  எழுத வேண்டிய பாடல்களோடு!""

நன்றி ‐ நம்தோழி

கருணாநிதியின் கடிதம் - தன் வரலாறு கூறுதல்


திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே…
கருணாநிதியின் கடிதம் ஒன்று கருணாநிதியின் இந்த அழிச்சாட்டியம்(?) தாங்க இயலாமல் கருணாநிதிக்கே கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவை( புரிகிறது ..சீரியசான) கற்பனை இது.
மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களுக்கு..
உங்களை மதிப்பிற்குரிய கருணாநிதி என்று அழைத்ததற்கு காரணம் இந்த உலகில்..அறிவியல் தொழிற் நுட்பம் வளர்ந்த இக் காலக்கட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ..யாருக்கும் எவ்வித உபயோகமில்லாமல்.. கதை கதையாய் …பக்கம் பக்கமாய் எழுதி குவிக்கும் தாங்கள் என்னைப் பொறுத்த வரை மதிப்பிற்குரியவர்தான்.
முன்பொரு காலத்தில் எனக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. 50 ,60 வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைவருக்கும் நான் தான் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப கருவி. என் வருகைக்காக ஊரே காத்திருக்கும். என்னை தபால்காரர் கொண்டு வருகையில் ஆசை ஆசையாய் வாங்கி துள்ளிக் குதித்தவர்களை நான் கண்டிருக்கிறேன். மகனின் கடிதத்தினை பார்த்த அழுத தாயை பார்த்திருக்கிறேன். காதலனின் கடிதத்தினை ரகசியமாக வாங்கி முத்தமிட்ட காதலியின் உதடுகளை பார்த்திருக்கிறேன். காதல் கோட்டை என்று என்னை வைத்து படமே வந்தது. ம்ம்ம். அதெல்லாம் ஒரு காலம் . அதற்கு பிறகு தொலைபேசி வந்தது. அப்போது என் மரியாதை சற்றே தளர்ந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை. இக்காலத்தில் செல்போன் என்ற ஒரு கருவி வந்திருக்கிறது. அவன் தான் என் வில்லன் . செல்போன் வந்த பிறகு செல்லாக்காசு ஆகிப் போனேன் நான். அப்படிப்பட்ட வலிமையான அந்த வில்லனையே தோற்கடித்தவர் தாங்கள். தினந்தோறும் மூட்டை மூட்டையாய் முரசொலியில் கடிதம் எழுதுகிறீர்கள். பிறகு தலைமை செயலகத்தில் அமர்ந்து வழுக்கியும்..வழுக்காமலும்.. நாசுக்காய் நாலு பைசாவிற்கு கூட மத்திய அரசு மதிக்காமல் இருக்கும் அளவிற்கு கடிதம் எழுதுகிறீர்கள் . யாராவது ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டி என்ன செய்தீர்கள் என கேட்டால் அதற்கும் தேதி வாரியாக ,மணி வாரியாக (இந்த புள்ளி விபரக் கணக்கில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை) கடிதத்தினை ஆதாரமாக காட்டி ஒரு கடிதம் என என் பயன்பாட்டினை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழன் அழிக்கப்பட்ட போது நீங்கள் மத்திய அரசுக்கு எழுதி குவித்த கடிதங்கள் டெல்லி மத்திய அரசின் அலுவலகங்களில் மலை போல குவிந்து இருப்பதாகவும்..அதில் பல கடிதங்கள் பிரித்துக் கூட பார்க்கப்படாமல் பாதுக்காக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்திருப்பது தாங்கள் தான். நீங்கள் இக் காரணத்தினை கூறி கின்னஸ் சாதனைக்கு ஒரு கடிதம் எழுதலாம். ஒரு வேளை தப்பித் தவறி இந்த காரணத்திற்காக கின்னஸ் விருது கொடுக்கப்பட்டால் …அடி தூள்…அதை வைத்து கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ் என அருமை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஒரு விழா எடுப்பார். அதில் வரும் கவியரங்கில் வைரமுத்து ,வாலி , பா.விஜய் போன்ற கலைஞர் அரங்க கவிஞர்களை “கடிதம் எழுதும் கலங்கரை விளக்கமே..உன் கடிதம் தான் சங்கத் தமிழின் விளக்கமே..உன் கடிதத்தினை கண்டால் அனைவருக்கும் நடுக்கமே..உன் கடிதங்களும் எதிர் காலத்தில் ஒரு புத்தகமாக மாறி உயிரை எடுக்குமே” என பாடச் சொல்லி முதல் வரிசையில் ரஜினிக்கும் கமலுக்கும் (வலுக் கட்டாயமாக ராமநாரயணனை வைத்து தூக்கி வந்து) நடுவில் அமர்ந்து ரசிக்கலாம். நினைக்கும் போது எனக்கே தலைச் சுற்றுகிறது.
என்னை நீங்களும் சில சமயங்களில் புறக்கணித்து இருக்கிறீர்கள் .டெல்லிக்கு போய் உங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்கும் போதும், எம்.பி சீட் பேரம் பேச டெல்லிக்கு போகும் போதும்..நீங்கள் கடிதங்கள் எழுதுவதில்லை. ஈழத்தமிழன் செத்தால் கூட கடிதம் எழுதி கண்ணியம் காக்கும் நீங்கள் பதவி என்ற ஒன்றுக்காக மட்டும் தான் என்னை மதிக்காமல் விமானம் ஏறி நேரே போய்விடுகிறீர்கள். அப்போதும் தாங்கள் கடிதம் எழுதி இருந்தால் …இன்னும் நான் உங்களை கொண்டாடி இருப்பேன். அப்போது மட்டும் டெல்லிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை மருந்துக் கணக்காய் தாங்கள் அனுப்பும் கடிதங்களின் உண்மை நிலை தங்களுக்கும் உறைத்து..பதவி போன்ற “உயிர் வாழும் மிக முக்கிய பிரச்சனைக்காக” நேரில் போவதே சாலச் சிறந்தது என சரியாக புரிந்துக் கொண்டு போய் விடுகிறீர்கள்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. என் மதிப்பினை நான் உணர்ந்து என் காலரை நானே தூக்கி விட்டுக் கொண்ட காலமும் உண்டு. சமீபத்தில் கொலை, கொள்ளை,கடத்தல் போன்ற மாபெரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு வந்த போது ..உங்கள் தலைமையின் கீழான தமிழக காவல் துறை டெல்லி காவல் துறைக்கு எழுதிய கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நீதிமன்றங்களுக்கு கூட குற்றவாளிகளை அழைத்து வருவது சிரமம் என யோசிக்கும் காவல்துறை நீதிபதி அறையில் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் வழக்கு நடத்துகையில் .. ஒரு குற்றவாளியினை பிடிப்பதற்கு ..நாடெங்கும் பேசினால் 50 பைசா என்ற நல்ல திட்டத்தினை கொண்டு வந்த கழக அரசின் காவல் துறை தொலைபேசி ,தந்தி, இணையம், செல் போன் என்ற எதையும் தூக்கி எறிந்து விட்டு எழுதினார்களே ஒர் கடிதம் …அது கடிதம் அல்ல…காலம் காலமாய் போற்றி காக்க வேண்டிய காவியம். டெல்லிக்கு வந்த கொலைக்காரன் டக்ளஸ் தேவானந்தாவினை பிடிக்க கடிதம் எழுதிய காவல் துறை ..இதோ மீனவன் செத்ததற்காக கதறும் சீமானைப் பிடிக்க மட்டும் தனிப்படைகள் வைப்பதுதான் எனக்கு புரியவில்லை.
டெல்லிக்கு அனுப்பும் கடிதங்களை எந்த தபால் பெட்டி மூலம் அனுப்புகிறீர்கள் என்று தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அந்த தபால் பெட்டியை உணர்வுள்ள எவனாவது தூக்கிக் கொண்டு கடலில் போட்டு விடப் போகிறான். அஞ்சல் துறையை அழிவில்லாமல் வாழ வைக்கும் உங்கள் அருமை இங்குள்ள எவனுக்காவது புரிகிறதா .. ( அய்யய்யோ.. இதை ஜெகத்ரட்சகன் படித்து விட்டு அஞ்சல் துறையை வாழ வைக்கும் அருமை தலைவருக்கு விழா எடுத்தால்..மேற்கண்ட விபரீத விளையாட்டிற்கு யார் பொறுப்பேற்பது..? )
என்னவோ சாட்டிலைட்டு ன்னு சொல்றான் ..இண்டர்நெட்டுன்னு சொல்றான். ஆனால் நீங்க மட்டும் தான் இன்னும் பேட்டரி லைட்டு காலத்துலயே இருந்துகிட்டு கடிதம் எழுதிகிட்டு இருக்கீங்க. நாட்டுல குப்பன்., சுப்பன்,கோவிந்தன் எல்லாம் எவனும் கடிதம் எழுதறது இல்ல. எஸ் எம் எஸ் அனுப்பிகிட்டும், வாய்ஸ்மெயில்ல பேசிகிட்டு இருக்கான். பொங்கல் வாழ்த்துக்கூட அனுப்பாம ஹேப்பி பொங்கல்ன்னு காப்பியை குடிச்சிகிட்டே கதை பேசுறான். பல ஊர்ல போஸ்ட் ஆபிஸ்ல காக்கா குருவி கூட கழியறத்துக்கு கூட வர்றதுல்ல.. மணி ஆர்டர் மணி டிரான்ஸ்பரா ஆயிட்டிச்சி.
ஆனா இந்த காலக் கட்டதிலும் நாய் கூட மதிக்காத எங்களை தாங்கள் மட்டும் மதித்து வருகிறீர்களே.. அதுதான் நெஞ்ச உருக்கி பஞ்சா அடிக்குது.. டெல்லிகார மன்மோகன் சிங் நீங்க எந்த கடிதம் அனுப்பினாலும் ..எப்ப அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்க பரீசிலிக்க ,ஆய்வு செய்து ஆலோசனை செய்ய அடுத்த மாதம் தயாராவோம் என்ற தரமான ஒரே பதிலை நாளொன்றுக்கு 100 ஜெராக்ஸ் காப்பி வீதம் போட்டு தயாரா இருக்கார்.
அப்பவும் நீங்க விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர் .
விடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும். அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறீங்களா..?
இப்படிக்கு.
கருணாநிதியின் கடிதம்
திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே…

கருணாநிதியின் கடிதம் ஒன்று கருணாநிதியின் இந்த அழிச்சாட்டியம்(?) தாங்க இயலாமல் கருணாநிதிக்கே கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவை( புரிகிறது ..சீரியசான) கற்பனை இது.

மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களுக்கு..

உங்களை மதிப்பிற்குரிய கருணாநிதி என்று அழைத்ததற்கு காரணம் இந்த உலகில்..அறிவியல் தொழிற் நுட்பம் வளர்ந்த இக் காலக்கட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ..யாருக்கும் எவ்வித உபயோகமில்லாமல்.. கதை கதையாய் …பக்கம் பக்கமாய் எழுதி குவிக்கும் தாங்கள் என்னைப் பொறுத்த வரை மதிப்பிற்குரியவர்தான்.

முன்பொரு காலத்தில் எனக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. 50 ,60 வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைவருக்கும் நான் தான் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப கருவி. என் வருகைக்காக ஊரே காத்திருக்கும். என்னை தபால்காரர் கொண்டு வருகையில் ஆசை ஆசையாய் வாங்கி துள்ளிக் குதித்தவர்களை நான் கண்டிருக்கிறேன். மகனின் கடிதத்தினை பார்த்த அழுத தாயை பார்த்திருக்கிறேன். காதலனின் கடிதத்தினை ரகசியமாக வாங்கி முத்தமிட்ட காதலியின் உதடுகளை பார்த்திருக்கிறேன். காதல் கோட்டை என்று என்னை வைத்து படமே வந்தது. ம்ம்ம். அதெல்லாம் ஒரு காலம் . அதற்கு பிறகு தொலைபேசி வந்தது. அப்போது என் மரியாதை சற்றே தளர்ந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை. இக்காலத்தில் செல்போன் என்ற ஒரு கருவி வந்திருக்கிறது. அவன் தான் என் வில்லன் . செல்போன் வந்த பிறகு செல்லாக்காசு ஆகிப் போனேன் நான். அப்படிப்பட்ட வலிமையான அந்த வில்லனையே தோற்கடித்தவர் தாங்கள். தினந்தோறும் மூட்டை மூட்டையாய் முரசொலியில் கடிதம் எழுதுகிறீர்கள். பிறகு தலைமை செயலகத்தில் அமர்ந்து வழுக்கியும்..வழுக்காமலும்.. நாசுக்காய் நாலு பைசாவிற்கு கூட மத்திய அரசு மதிக்காமல் இருக்கும் அளவிற்கு கடிதம் எழுதுகிறீர்கள் . யாராவது ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டி என்ன செய்தீர்கள் என கேட்டால் அதற்கும் தேதி வாரியாக ,மணி வாரியாக (இந்த புள்ளி விபரக் கணக்கில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை) கடிதத்தினை ஆதாரமாக காட்டி ஒரு கடிதம் என என் பயன்பாட்டினை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழன் அழிக்கப்பட்ட போது நீங்கள் மத்திய அரசுக்கு எழுதி குவித்த கடிதங்கள் டெல்லி மத்திய அரசின் அலுவலகங்களில் மலை போல குவிந்து இருப்பதாகவும்..அதில் பல கடிதங்கள் பிரித்துக் கூட பார்க்கப்படாமல் பாதுக்காக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்திருப்பது தாங்கள் தான். நீங்கள் இக் காரணத்தினை கூறி கின்னஸ் சாதனைக்கு ஒரு கடிதம் எழுதலாம். ஒரு வேளை தப்பித் தவறி இந்த காரணத்திற்காக கின்னஸ் விருது கொடுக்கப்பட்டால் …அடி தூள்…அதை வைத்து கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ் என அருமை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஒரு விழா எடுப்பார். அதில் வரும் கவியரங்கில் வைரமுத்து ,வாலி , பா.விஜய் போன்ற கலைஞர் அரங்க கவிஞர்களை “கடிதம் எழுதும் கலங்கரை விளக்கமே..உன் கடிதம் தான் சங்கத் தமிழின் விளக்கமே..உன் கடிதத்தினை கண்டால் அனைவருக்கும் நடுக்கமே..உன் கடிதங்களும் எதிர் காலத்தில் ஒரு புத்தகமாக மாறி உயிரை எடுக்குமே” என பாடச் சொல்லி முதல் வரிசையில் ரஜினிக்கும் கமலுக்கும் (வலுக் கட்டாயமாக ராமநாரயணனை வைத்து தூக்கி வந்து) நடுவில் அமர்ந்து ரசிக்கலாம். நினைக்கும் போது எனக்கே தலைச் சுற்றுகிறது.

என்னை நீங்களும் சில சமயங்களில் புறக்கணித்து இருக்கிறீர்கள் .டெல்லிக்கு போய் உங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்கும் போதும், எம்.பி சீட் பேரம் பேச டெல்லிக்கு போகும் போதும்..நீங்கள் கடிதங்கள் எழுதுவதில்லை. ஈழத்தமிழன் செத்தால் கூட கடிதம் எழுதி கண்ணியம் காக்கும் நீங்கள் பதவி என்ற ஒன்றுக்காக மட்டும் தான் என்னை மதிக்காமல் விமானம் ஏறி நேரே போய்விடுகிறீர்கள். அப்போதும் தாங்கள் கடிதம் எழுதி இருந்தால் …இன்னும் நான் உங்களை கொண்டாடி இருப்பேன். அப்போது மட்டும் டெல்லிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை மருந்துக் கணக்காய் தாங்கள் அனுப்பும் கடிதங்களின் உண்மை நிலை தங்களுக்கும் உறைத்து..பதவி போன்ற “உயிர் வாழும் மிக முக்கிய பிரச்சனைக்காக” நேரில் போவதே சாலச் சிறந்தது என சரியாக புரிந்துக் கொண்டு போய் விடுகிறீர்கள்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. என் மதிப்பினை நான் உணர்ந்து என் காலரை நானே தூக்கி விட்டுக் கொண்ட காலமும் உண்டு. சமீபத்தில் கொலை, கொள்ளை,கடத்தல் போன்ற மாபெரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு வந்த போது ..உங்கள் தலைமையின் கீழான தமிழக காவல் துறை டெல்லி காவல் துறைக்கு எழுதிய கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நீதிமன்றங்களுக்கு கூட குற்றவாளிகளை அழைத்து வருவது சிரமம் என யோசிக்கும் காவல்துறை நீதிபதி அறையில் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் வழக்கு நடத்துகையில் .. ஒரு குற்றவாளியினை பிடிப்பதற்கு ..நாடெங்கும் பேசினால் 50 பைசா என்ற நல்ல திட்டத்தினை கொண்டு வந்த கழக அரசின் காவல் துறை தொலைபேசி ,தந்தி, இணையம், செல் போன் என்ற எதையும் தூக்கி எறிந்து விட்டு எழுதினார்களே ஒர் கடிதம் …அது கடிதம் அல்ல…காலம் காலமாய் போற்றி காக்க வேண்டிய காவியம். டெல்லிக்கு வந்த கொலைக்காரன் டக்ளஸ் தேவானந்தாவினை பிடிக்க கடிதம் எழுதிய காவல் துறை ..இதோ மீனவன் செத்ததற்காக கதறும் சீமானைப் பிடிக்க மட்டும் தனிப்படைகள் வைப்பதுதான் எனக்கு புரியவில்லை.

டெல்லிக்கு அனுப்பும் கடிதங்களை எந்த தபால் பெட்டி மூலம் அனுப்புகிறீர்கள் என்று தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அந்த தபால் பெட்டியை உணர்வுள்ள எவனாவது தூக்கிக் கொண்டு கடலில் போட்டு விடப் போகிறான். அஞ்சல் துறையை அழிவில்லாமல் வாழ வைக்கும் உங்கள் அருமை இங்குள்ள எவனுக்காவது புரிகிறதா .. ( அய்யய்யோ.. இதை ஜெகத்ரட்சகன் படித்து விட்டு அஞ்சல் துறையை வாழ வைக்கும் அருமை தலைவருக்கு விழா எடுத்தால்..மேற்கண்ட விபரீத விளையாட்டிற்கு யார் பொறுப்பேற்பது..? )

என்னவோ சாட்டிலைட்டு ன்னு சொல்றான் ..இண்டர்நெட்டுன்னு சொல்றான். ஆனால் நீங்க மட்டும் தான் இன்னும் பேட்டரி லைட்டு காலத்துலயே இருந்துகிட்டு கடிதம் எழுதிகிட்டு இருக்கீங்க. நாட்டுல குப்பன்., சுப்பன்,கோவிந்தன் எல்லாம் எவனும் கடிதம் எழுதறது இல்ல. எஸ் எம் எஸ் அனுப்பிகிட்டும், வாய்ஸ்மெயில்ல பேசிகிட்டு இருக்கான். பொங்கல் வாழ்த்துக்கூட அனுப்பாம ஹேப்பி பொங்கல்ன்னு காப்பியை குடிச்சிகிட்டே கதை பேசுறான். பல ஊர்ல போஸ்ட் ஆபிஸ்ல காக்கா குருவி கூட கழியறத்துக்கு கூட வர்றதுல்ல.. மணி ஆர்டர் மணி டிரான்ஸ்பரா ஆயிட்டிச்சி.

ஆனா இந்த காலக் கட்டதிலும் நாய் கூட மதிக்காத எங்களை தாங்கள் மட்டும் மதித்து வருகிறீர்களே.. அதுதான் நெஞ்ச உருக்கி பஞ்சா அடிக்குது.. டெல்லிகார மன்மோகன் சிங் நீங்க எந்த கடிதம் அனுப்பினாலும் ..எப்ப அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்க பரீசிலிக்க ,ஆய்வு செய்து ஆலோசனை செய்ய அடுத்த மாதம் தயாராவோம் என்ற தரமான ஒரே பதிலை நாளொன்றுக்கு 100 ஜெராக்ஸ் காப்பி வீதம் போட்டு தயாரா இருக்கார்.

அப்பவும் நீங்க விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர் .

விடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும். அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறீங்களா..?

இப்படிக்கு.

கருணாநிதியின் கடிதம்

நன்றி: நாம் தமிழர் 


இந்திய ரூபாய் அடையாளக் குறியீடு

இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி, ஜூலை 15,2010 : இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை, மத்திய அமைச்சரவை இன்று இறுதி செய்து ஒப்புதல் அளித்தது.

இதற்கென, தேவனகிரி ரா (Ra) மற்றும் ரோமன் ஆர் (R) ஆகிய இரண்டும் இணைந்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய்க்காக தெரிவு செய்யப்பட்டிருந்த ஐந்து குறியீடுகளில், ஐ.ஐ.டி. முதுகலை பட்டதாரி உதய் குமார் வடிவமைத்த குறியீட்டையே மத்திய அமைச்சரவை தேர்வு செய்தது.

ரூபாய்க்கான புதிய குறியீட்டின் வடிவத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி வெளியிட்டார்.
'உலகப் பொருளாதாரத்துடன் சேர்ந்து இந்தியப் பொருளாதாரம் சீரான வளர்ச்சி பெற்று வருகிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் முதலீடுகள் குவியும் முனையமாகவும் இந்தியா உருவெடுத்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெல்லிங், ஜப்பான் யென், ஐரோப்பிய யூனியனின் யூரோ ஆகிய கரன்சிகளுக்கு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் பிரத்யேக குறியீடு வடிவமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

மேலும், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் ருபையா, ருபி என்ற பெயரில் கரன்சி பயன்படுத்துவதால் அவற்றில் இருந்து இந்திய ரூபாயை வித்தியாசப்படுத்திக்காட்டும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய ரூபாய்க்கு குறியீடு வடிவமைக்க இந்திய குடிமக்களுக்கு போட்டி அறிவிக்கப்பட்டது. குறியீட்டை வரைந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தன.

இவற்றில் இருந்து சிறந்த குறியீட்டைத் தேர்வு செய்ய இந்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவர் தலைமையில் ஓவியம் மற்றும் டிசைனிங் நிறுவனங்களைச் சேர்ந்த 3 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 5 குறியீடுகளை இக்குழு தேரிவு செய்து, அவற்றை மத்திய அரசு பரிசீலனைக்கு அனுப்பியது. அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறியீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி அதை வெளியிட்டுள்ளது.

இந்திய தரக்கட்டுப்பாடு நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்தக் குறியீட்டுக்கான எழுத்துரு 6 மாதத்தில் உருவாக்கப்படும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் யுனிகோட் மற்றும் ஐஎஸ்ஓ/ஓஇசி 10646 ஆகியவற்றுக்கு ஏற்ப எழுத்துரு இரண்டாண்டுகளுக்குள் உருவாக்கப்படும்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் விசைப் பலகைகளில் யூரோ கரன்சிக்கான குறியீடு கிடையாது. ஆனாலும் அதற்கான எழுத்துரு இருப்பதால் பயன்படுத்துகிறோம். இதே போல விசைப்பலகையில் குறியீடு இல்லாவிட்டாலும் ரூபாய் குறியீட்டை தட்டச்சு செய்யும் வகையில் வசதிகள் செய்யப்படும்.

நன்றி: விகடன் 

Wednesday, July 14, 2010

Plant - eating the rats as food

உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிக்கும் வல்லமை கொண்ட தாவரம் ஒன்று தொடர்பான அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செடியின் இலைகள் உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன் அலாஸ்டியர் ரொபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப்பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்தபோதுதான் இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர்.
இது குறித்து மெக்பெர்சன் கூறியிருப்பதாவது....
இந்த கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. 21ஆம் நூற்றாண்டு வரை இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம் அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சேர். டேவிட் அட்டன்பரோ. எனவே அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி இந்த தாவரம் "நேபன்தஸ் அட்டன்பரோகி" என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.

இந்த செடியின் இலைகள் தான் அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான எண்ணெய் பசைகளில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர் அந்த பசை எலிகளை கொன்று விடுகிறது.
எலிகள் மட்டுமல்ல பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவரவியலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில் மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர் சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்.

Tuesday, July 13, 2010

நலம் தரும் காய்கறிகள்





“உணவே மருந்து,
மருந்தே உணவு”

என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால்,

10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்..

உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.

இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர்.

ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்

வாழைப்பூ

இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி,சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்

இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்

வைட்டமின் ஏ, பி,சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு

கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்

கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்

போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்

வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சவ்சவ்

கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்

புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்

உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப் படுத்தும்.

கத்தரி பிஞ்சு

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

நன்றி: நக்கீரன்

மகளிர் மருத்துவம் - சூதக வலி

                   பெண்கள் தான் நாட்டின் கண்கள்.  பெண்களின் நலமே குடும்பத்தின் நலம்.  இதனால்தான் பெண்களை தெய்வமாகப் போற்றி வந்தனர் நம் முன்னோர்கள். 

இயற்கையாக பெண்களுக்கு சில உபாதைகள் ஏற்படும்.  இக்காலக்கட்டங்களில் பெண்கள் தங்கள் உடலை பேணி பராமரித்தால் நோய்கள் ஏதும் அணுகாது.  பெண்கள் ஆரோக்கியமாக  இருந்தால்தான் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

பெண்களுக்கு உண்டாகும் இன்னல்களில் சூதக வலியும் ஒன்று.   அதைப் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம். 

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றை இறுக்கிச் சுருக்குவதுபோல் தோன்றும்.  இந்த வேதனையால் மனதை எதிலும் நாட்டம் கொள்ள முடியாமலும், அன்றாட வேலைகளைக் கூட சரியாகச் செய்ய முடியாமலும் அவதிப்படுத்தும்.  இதையே சூதக வலி என்கின்றனர்.

இந்த சூதக வலி திருமணமான இளம் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.  திருமணமாகாத பெண்களையும் பாதிப்பதுண்டு. அதுபோல் பூப்பெய்தும் பருவம் உள்ள பெண்களுக்கு  அடிவயிற்றிலும், முதுகிலும் இந்த வலி அதிகமாக ஏற்படும்.  சில சமயங்களில் வாந்தி, குமட்டல் வயிற்றுப் பொருமல் போன்றவை தொடர்ந்து உண்டாகும்.

இக்காலங்களில் இவர்கள் அதிகம் மன அழுத்தம் கொள்வார்கள்.  எதிலும் நாட்டம் கொள்ள மாட்டார்கள்.  அடிக்கடி சோர்வுற்றுக் காணப்படுவார்கள்.  மற்றவரிடம் பேசும்போது எரிந்து விழுவார்கள்.    சில நேரங்களில் வேதனையில் அழக்கூடச் செய்வார்கள்.  வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் இதனை ஒரு கொடிய நோயாகவே கருதுகின்றனர்.  இதனால் சில பெண்கள் திருமணம் செய்துகொள்ளக் கூட தயங்குவார்கள்.  திருமணமான சில பெண்கள் கருத்தரிப்பதில் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள்.

சூதக வலியானது முதல்நிலை சூதக வலி, இரண்டாம் நிலை சூதக வலி  என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

முதல் நிலை சூதக வலி

இவ்வகை வலி எந்த ஒரு நோய் நிலைக்கும் உட்பட்டதாக இருக்காது.  பூப்புக் காலங்களில் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும், வேதியல் மாற்றங்களாலும் உண்டாகலாம்.  இது மாதிரியான சூதக வலி பெரும்பாலும் பதினெட்டு முதல் இருபத்தி ஐந்து வயது வரை உள்ள மகளிருக்கே அதிகம் காணப்படும்.

இரண்டாம் நிலை சூதக வலி

இரண்டாம் நிலை சூதக வலியானது ஏதேனும் கூபக (ணீஞுடூதிடிண்) நோயினைத் தொடர்ந்து  ஏற்பட்டதாக இருக்கும்.

கருப்பையில் கழலைக் கட்டிகள், கருப்பையின் சளிச்சவ்வு பாதிப்படைந்த நிலை, சினைப்பை தாபிதம், சினைப்பை உள்கவச தாபிதம், கருப்பை இரண்டாக பிளவுபட்ட நிலை, கருப்பையின் தசை வலுவிழந்த நிலை, கருப்பை தாபிதம், பெரும்பாடு போன்ற நோய் நிலைகளில் சூதக வலி உண்டாகும்.

எனவே, சூதக வலி உண்டான ஆரம்ப காலத்திலேயே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.  நோய்க்கு தக்க மருத்துவத்தை ஆரம்பத்திலேயே மேற்கொண்டால் தீவிர நிலைகளில் இருந்து தப்பிவிடலாம்.

இறுகிச் சுருக்கும் வலி

மாதவிடாய் காலங்களில் முதல் மற்றும் இரண்டாம் நாளில் இவ்வகை வலி தோன்றும்.  அடிவயிற்றில் சுருக் சுருக் என்று வலி தோன்றும்.  சில நேரங்களில் வலியானது தொடைகளுக்கும் பரவுவதுண்டு.

கஞ்சித சூதக வலி

இதில் மாதவிடாய் தோன்றும் பத்து நாட்களுக்கு முன்பே சூதக வலி உண்டாகும்.    இவ்வகை வலி கருப்பை நோய் தொற்றுகளாலும், கருப்பை கட்டிகள், கருப்பை உள்கவச  தாபிதம் போன்ற நோய் நிலைகளில் பெரும்பாலும் உண்டாகலாம்.

சளிச்சவ்வு சூதக வலி

இவ்வகையில் அடிவயிற்றில் மிகுந்த வலி தோன்றும்.  தலைவலி, மனச்சோர்வு கூட தொடர்ந்தாற் போல் ஏற்படும்.  முதலில் வலி ஏற்படும் பின்பு பூப்புக் கசிவு உண்டாகும்.  சளிச்சவ்வானது கட்டி கட்டியாக வெளியாகும்.  இந்நிலையில் மகளிர்க்கு உண்டாகும் வலியானது சிறு அளவிலும் தாங்கமுடியாததாக இருக்கும்.

குறிகுணங்கள்

சூதக வலியானது பெண்களில் எழுபது சதவீதம் பதின் பருவத்திலும் (கூஞுஞுண ச்ஞ்ஞு), முப்பது முதல் ஐம்பது சதவீதம் மற்ற வயது பெண்களுக்கும் உண்டாகும்.  இந்த வலியானது அநேகருக்கு தாங்கக்கூடிய அளவில் இருக்கும்.  எனினும் ஐந்து முதல் பதினைந்து சதவீதம் உள்ள பெண்களுக்கே அன்றாட வேலைகளைச்  செய்ய முடியாத நிலை உண்டாகலாம்.

புரோஸ்டோ கிளான்டின் என்னும் சுரப்பானது குருதியில் அதிகம் கலப்பதால்  இவ்வகை சூதக வலி உண்டாகும்.  இந்த வலியைத் தொடர்ந்து குமட்டல், வாந்தி, அடிமுதுகில் வலி, தலைச்சுற்றல், மயக்கம், மனச் சோர்வு அடைதல் போன்றவை உண்டாகும்.

பெரும்பாலும் பூப்பு அடைந்த 6 முதல் 12 மாதங்களுக்கு  தொண்ணூறு சதவீதம் பெண்களுக்கு சூதக வலி உண்டாகும்.  பின்பு நாட்பட்ட நிலையில் தானே குணமாவதும் உண்டு.


மருத்துவம்

சூதக வலியின் ஆரம்ப கட்டத்தில் கீழ்க்கண்ட மருந்துகளைப் பயன்படுத்தலாம்.  உளுந்து களி செய்து அடிக்கடி உண்டு வந்தால் இடுப்பு எலும்புகள் நன்கு வலுப்பெறும்.

கற்றாழை லேகியத்தை 5 கிராம் அளவு மூன்று மாதங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் கருப்பையின் அழுக்கு வெளியேறி கருப்பை நன்கு வலுவடையும்.

மாதுளை மணப்பாகு உண்டு வரலாம்.  இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

முருங்கைக் கீரை, அத்திப் பிஞ்சு, பேரீச்சம் பழம், திராட்சை, கரிசாலைக் கீரை, பனங்கற்கண்டு, இலந்தை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

நன்றி: நக்கீரன் 

கற்ப மூலிகை - வேப்பிலை




                 டலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள்.

நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு.


இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு.  இதனை சக்தி என்றே அழைக்கின்றனர்.  சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது.  மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின்  இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர்.  அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர். 

ஆனால் கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர். 

2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில்  வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.  கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது.

1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory)

2.  வீக்க உருக்கி (anti inflammatory)

3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic)

4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer)

5. மலேரியா போக்கி (Anti malarial)

6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal)

7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial)

8. வைரஸ் அகற்றி (Anti viral)

9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant)

10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous) 

வேப்பிலையில்  நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.  இதில் Azadirachtia, nimbidiol, nimbidin  போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன. 

வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர்.  வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர். 

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு.  சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும். 

வேப்பிலையை பயன்படுத்தும் முறை

* புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

* வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

* வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

வேப்பிலையின் பொதுவான பயன்கள்

* வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

* சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

* சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

* வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால்  சாதாரண சளி இருமல் குறையும்.

* வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது.  இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.
அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்

சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும்.  இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.  காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு.  கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு.  இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது. 

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு.  இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்.

நன்றி:  நக்கீரன்

கற்ப மூலிகை - கற்பூரவள்ளி





                        காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.

சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்ற வள்ளுவரின் வாக்குப்படியும், சித்தர்களின் கூற்றுப்படியும், நோய் வந்ததற்கான காரணங்களை அறிந்து அந்த நோயினை தீர்க்கும் வழியினை கண்டுபிடித்து அதை சீர் செய்து மீண்டும் நோய் ஏதும் உடலை அணுகாதவாறு காக்க மக்களுக்கு சித்தர்கள் சொன்ன வழிமுறைதான் காய கற்ப முறையாகும்.

கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், நோய் என்னும் காலன் நம்மை நெருங்காமல் என்றும் புத்துணர்வுடனும், இளமையுடனும் வாழலாம்.


கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.

கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்புரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.

கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.

குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க

சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.

இதனை தொட்டிகளில் வளர்த்து அதன் முழுமையான பயன்களைப் பெற்று நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

நன்றி: நக்கீரன்

கற்பக மூலிகை - துளசி




ற்பம் என்பது உடலை கல் போல ஆக்குவது.

துளசி (Ocimum sanctum) மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.

துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.

துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள். கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியின் பயன்கள்

· இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.

· துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.

· நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

· மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.

· உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

· இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

· கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

· ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது.

· வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.

துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை - 9 எண்ணிக்கை

கடுக்காய் தோல் - 5 கிராம்

கீழாநெல்லி - 10 கிராம்

ஓமம் -5 கிராம்

மிளகு - 3

எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

தலைவலி தீர

ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.

சரும நோய்கள் நீங்க

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.

நன்றி: நக்கீரன்

கற்ப மூலிகை - வல்லாரை




                         ரை, திரை, மூப்பு, பிணி நீக்கி, வயதுக்கு ஏற்ப உடலில் உண்டாகும் பாதிப்புகளை போக்கி என்றும் இளமையுடன் வாழ வைப்பதற்கு சித்தர்கள் கண்ட முறைதான் காயகற்ப முறையாகும்.

கற்பத்தை யுண்டால் காயம் அழியாது

கற்பத்தி னாலே காணலாம் கைலையை

கற்பத்தி னாலே காணலாம் சோதியை

கற்பத்தி னாலே காலையுங் கட்டிடே

உடலை நோயின்றி காக்கும் கற்ப முறைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வல்லாரை

உடலுக்கு வன்மையையும், அறிவையும் அள்ளித் தரும் மூலிகைதான் வல்லாரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த மூலிகை இந்தியாவெங்கும் நீர்நிலைகள் அதாவது ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இலைகளில் நரம்புகள் இழையோடுவதைக் காணலாம்.

பொதுவாக வல்லாரை உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியைத் தரும். மூளையின் நரம்புகளைத் தூண்டி நினைவாற்றலைப் பெருக்கும். இம் மூலிகையில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என முச்சுவையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வல்லாரை யோசன வல்லி, பிண்டீரி, சண்டசி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

வல்லாரைக் கற்பமுறை வல்லாரை யார்நிகர்வார்

கல்லாரைப் போலக் கலங்காமல்-வல்லாரைச்

சாறு மிலவணமுஞ் சாபத்திரி யுண்ணப்

பேருமடி வல்லைப் பிணி

தேரன் - வெண்பா

வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளையும் 1 தேக்கரண்டி பொடியில் தேவையான அளவு தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

எல்லா வகையான சுரங்களையும் நெருங்க விடாது. சூட்டைத் தணிக்கும். சிரசின் உஷ்ணத்தைக் குறைத்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும்.

வல்லாரை னினிலை மருவுகற்ப மாய்க்கொள்

வெல்லாப் பணிகளு மிலாமையா மெய்யினில்

அகத்தியர் குணபாடம்

வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடித்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதியை குணமாக்கும். குறிப்பாக வல்லாரை சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும் . உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

வல்லாரையிலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

குழந்தைகளுக்கு தினமும் 10 வல்லாரை யிலையை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்படும். தொண்டைக் கம்மல் குறையும்.

வல்லாரையின் பயன்கள்

· ஞாபக சக்தியை தூண்டும் இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.

· இரத்த சோகையை போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

· வல்லாரை பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகளைப் போக்கும். பல்லீறுகளை பலப்படுத்தும்.

· ஈளை, இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டை போக்கும். காச நோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

· கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத் திறனை அதிகரிக்கும்.

· நீரிழிவு நோயாளிகள் வல்லாரை கீரை உண்பது நல்லது. மலச்சிக்கலைப் போக்கி வயிற்றுப்புண், குடற்புண்ணை ஆற்றுகிறது.

· யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரையிலையை அரைத்து கட்டினால் நோயின் தாக்கம் குறையும். இதுபோல் விரைவீக்கம், வாயுவீக்கம், கட்டிகளின் மேலும் பூசிவந்தால் குணம் கிட்டும்.

வல்லாரை இலையை முறைப்படி எண்ணெய் செய்து தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.
நன்றி:  நக்கீரன்

முக்கனி




                    ழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். நாம் தினமும் காய்கறிகள் கீரைகள்போன்றவற்றை சமைத்துதான் சாப்பிடுகிறோம். இவற்றில் சில சத்துக்கள்சமைக்கும்போது அழிந்து விடுகின்றன. ஆனால் சமைக்காத பொருளான பழங்களில்உள்ள அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. வளரும்குழந்தைகள் கர்ப்பிணிகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவதுபழங்கள் தான்.

பழங்களில் தான் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

இத்தகைய பழங்களில் முக்கனிகள் என்று அழைக்கப்படும் மா, பலா, வாழையின் மருத்துவ பயன்களை அறிவோம்.

இந்த முக்கனிகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் ஆயுளையும் நீடிக்கச் செய்யும். இப்பழங்களின் பூர்வீகம் இந்தியாவாகும்.

மாம்பழம்

ராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும். மாம்பழத்தின் பூர்வீகம்தென்னிந்தியா தான். தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்அதிகம் விளைகிறது. ஆந்திராவிலும் அதிகம் விளைகிறது.

மாம்பழம் பொதுவாக கோடைக் காலத்தில் அதிகம் விளையும். நன்கு கனிந்தமாம்பழத்தை உண்பது நல்லது. மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் பழம் தான்.ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு.மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெறும்வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்துசாப்பிடுவது நல்லது.

100 கிராம் மாம்பழத்தில்

நீர்ச்சத்து - 76.0 கிராம்

நார்ச்சத்து - 0.6 கிராம்

தாதுப் பொருள் - 0.4 கிராம்

கொழுப்பு - 0.4 கிராம்

புரதம் - 0.5 கிராம்

மாவுப்பொருள் - 17.0 கிராம்

சுண்ணாம்புச் சத்து - 13 மில்லி கிராம்

இரும்புச் சத்து - 1.2 மில்லி கிராம்

கரோட்டின் - 2740 தஞ்

எரிசக்தி - 72. கலோரி

தையமின்-0.8 மி.கி

நியாசின் - 0.8 மி-கி

ரைபோஃபிளேவின் - 0.08 மி.கி

வைட்டமின் சி - 16.0 மி.கி.

மாம்பழத்தின் மருத்துவப் பயன்கள்

· காலை உணவு முடித்து 30 நிமிடங்களுக்கு பின் 50 கிராம் மாம்பழச்சாற்றுடன் ஒரு ஸ்பூன் நெய்யும், 1 ஸ்பூன் தேனும் கலந்து அருந்திவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் புண்குணமாகும்.

மேற்கண்ட முறைப்படி அருந்தி வரும் நாட்களில் மலம் அதிகளவு வெளியேறினால் தேனை இரட்டிப்பாக சேர்த்துக்கொள்ளலாம்,.

· மாம்பழத்தின் சாறுடன், தேன், குங்குமப் பூ, ஏலக்காய்த் தூள், பச்சைகற்பூரம் இவைகளை சிறிதளவு சேர்த்து அதில் காய்ச்சிய பாலைக் கலந்து இரவுஉணவுக்குப்பின் அருந்தி வந்தால் இதயம் பலப்படும்.

· சிறு குழந்தைகளுக்கு உணவு சாப்பிட்டப்பின் மாம்பழம் கொடுப்பது நல்லது.மாம்பழத்தை நெய்யில் தடவிக் கொடுப்பது மிகவும் நல்லது. இரவில் பாலும்கொடுத்து வந்தால் குழந்தை கொழுகொழுவென்று வளரும்.

· இரவு உணவின் அளவைக் குறைத்து மாம்பழத் துண்டுகளை சாப்பிட்டு பால் அருந்தினால் உடல் பலமடைவதுடன் செரிமான சக்தியும் கூடும்.

· மாத விலக்கு சீராக இல்லாத பெண்கள் மாம்பழம் கிடைக்கும் காலங்களில் அதைபாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு சீராகும்.

· இரவு உணவுக்குப்பின் மாம்பழச் சாறு சாப்பிட்டு வந்தால் முகம் பளபளக்கும்.

· மலட்டுத் தன்மையைப் போக்கி ஆண்மையை அதிகரிக்கும்.

· புளிப்பு மாம்பழச் சாறு 100 மி.லி. அதனுடன் 50 கிராம் நெய் இரண்டையும்கலந்து ஒரு சட்டியில் ஊற்றி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்து சூடேற்றிஇறக்கிக் கொள்ளவும். காலை, பகல் உணவோடு ஊறுகாய்க்குப் பதிலாகசேர்த்துக்கொண்டு வந்தால் உணவு எளிதில் சீரணமாகும். நரம்பு தளர்ச்சிநீங்கும்.

நீரிழிவு நோய் கொண்டவர்கள், சொறி, சிரங்கு உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது .

பலாப்பழம்

பலாப்பழத்தின் தாயகம் இந்தியாதான். முக்கனிகளில் இரண்டாவது கனியாகும்.

வெளியில் கரடுமுரடான முட்களுடன் காணப்படும் பெரிய பழமாகும். உள்ளே மஞ்சள் நிறத்தில் சுளைகளாக காணப்படும்.

100 கிராம் பழத்தில்

வைட்டமின் ஏ - 150 மில்லி கிராம்

வைட்டமின் பி - 6 மி.கி

வைட்டமின் சி - 6 மி.கி

இரும்புச் சத்து - 0,5 மி.கி.

சுண்ணாம்புச்சத்து - 20 மி.கி

கலோரி - 88 மி.கி

புரதம் - 1.9 கிராம்

தாது உப்புக்கள் -0.9 கிராம்

சர்க்கரைச்சத்து - 19.8 கிராம்

அடங்கியுள்ளன

பலாப்பழத்தின் மருத்துவப் பயன்கள்

· பலாப்பழத்தை நேரடியாக உண்பது நன்கு சுவையாக இருக்கும். ஆனால் அவ்வாறுஉண்ணாமல் பலாப்பழத்தை தேன், நெய், சர்க்கரை சேர்த்து உண்பது நல்லது.

· பலாப்பழச் சுளைகளை நெய்விட்டு வதக்கி உட்கொண்டால் உடல் வலுவடையும்.

· பலாச் சுளைகளை தேனில் நனையவிடுங்கள், சிறிது நேரம் கழித்து சிறிதுநெய்விட்டு கலக்கவும். மீண்டும் சிறிது நேரம் ஊறவைக்கவும். மாலை வேளையில்இதனை சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்பட்டு எப்போதும் மனம்புத்துணர்வுடன் காணப்படும்.

· பலாச் சுளைகளுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்எளிதில் சீரணமாகும். இருமல் கட்டுப்படும். நாவறட்சி நீங்கும். களைப்புமுற்றிலும் நீங்கும்.

பலாச் சுளைகளை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மண்சட்டியில் போட்டு அதில்பாலை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அதனுடன் சிறிது தேனையும்,நெய்யையும் கலந்து ஏலக்காய் தூளையும் சேர்த்து அருந்தினால் சுவையாகஇருப்பதுடன் உடலுக்கு நலத்தையும் கொடுக்கும். இரத்தம் விருத்தியாகும்.நரம்புகளுக்கு வலு உண்டாகும். உடல் நன்கு வளர்ச்சிகாணும். காச நோயாளிகள்,வாத நோயாளிகள், பித்த நோயாளிகள் பால் கொடுக்கும் தாய்மார்கள்,மலச்சிக்கல் உள்ளவர்கள் பலாப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழம்

முக்கனிகளில் மூன்றாவது கனிதான் வாழை. எந்தக் காலத்திலும் கிடைக்கும்பழமாகும். உலக மக்கள் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில்வாழைப்பழத்திற்குத்தான் முதலிடம்.

வாழைப்பழம் சமய விழாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாழைப்பழத்தில்பலவகைகள் உள்ளன. நாட்டு வாழைப்பழம், மலை வாழை, பச்சை வாழை, பேயன் வாழை,செவ்வாழை, நாவரை வாழை, மொந்தன் வாழை, கற்பூரவல்லி வாழை, நேந்திரன் வாழை,ரஸ்தாளி வாழை, சர்க்கரை வாழை, கதலி வாழை, சிங்கன் வாழை, மட்டி வாழை என பலவகைகள் உண்டு. இதில் எல்லா வகை பழங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை.

வாழைப்பழத்தில்

உண்ணத் தகுந்தவை - 71 %

புரதம் - 1.2 கிராம்

சர்க்கரை சத்து - 27.2 கிராம்

சக்தி - 116 கலோரி

சுண்ணாம்புச் சத்து - 17 மி.கி,

இரும்பு சத்து - 0.9 மி.கி

வைட்டமின் சி - 7 மி.கி

பாஸ்பரஸ் - 36 மி.கி

வாழைப்பழத்தின் மருத்துவப் பயன்கள்

· வயிற்றப்புண் ஏற்பட்டால் சரியாக சாப்பிட முடியாமல் தவிப்பார்கள்.இவர்கள் முறையாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் நீங்கும்.

· மூல நோய் உள்ளவர்கள் வாழைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும்.

இரவு உணவுக்குப்பின் ஒரு பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மூல நோய் தணியும்.

· நீண்ட நாட்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள் ஆணும், பெண்ணும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கி குழந்தை பேறு கிடைக்கும்

· பழுத்த நேந்திரம் பழத்தை இட்லி சட்டியில் வைத்து இட்லி அவிப்பதுபோல்அவித்து எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் நெய் கலந்து சாப்பிட்டால்மெலிந்த உடல் தேறும்.

· உடல் பருமன் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அதாவதுஇரவு உணவுக்குப் பதில் 3 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம்கழித்து வெந்நீர் அருந்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தொப்பைகுறையும்.

முக்கனி லேகியம்

நன்கு கனிந்த மா, பலா, வாழை பழங்களை எடுத்து சிறு சிறு துண்டுகளாக்கி மண்பாத்திரத்தில் இட்டு குலுக்கி அதனுடன் தேன் கற்கண்டு கலந்து இலேகியமாக்கிசாப்பிட்டு வந்தால் முக்கனிகளின் சத்துக்கள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். முக்கனிகளில்மருத்துவப் பயன்கள் அனைத்தும் உடலுக்கு வலு தருவதாகும். இவற்றை சாப்பிட்டுநீண்ட ஆயுளைப் பெறுவோம்.

நன்றி:  நக்கீரன்